பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 28 பேர் பலியான சோகம்
பாகிஸ்தானில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலியாகினர்.
ஆசிய நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் சென்றது.
பலுசிஸ்தான் மாகாணம் டர்பத்தில் இருந்து கிளம்பிய பேருந்து, குவெட்டாவிற்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பாரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. பலுசிஸ்தான் முதல்வர் சர்ஃப்ராஸ் புக்டி, உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
அதேபோல் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் தனித்தனியாக வருத்தம் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |