இரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்த பிரபல ராப் பாடகர்! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்
அமொரிக்காவின் சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஒருவர் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேக் ஆப் என்று அழைக்கப்படும் கிர்ஷ்னிக் காரி பால் இவர் மிகோஸ் என்கிற பிரபல ராப் இசைக்குழுவை சேர்ந்தவர். இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு தனது உறவுக்காரர் மற்றும் சக இசைக்கலைஞருடன் சென்றிருந்த போது அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து பகடைக்காய் விளையாடி கொண்டிருக்கையில் விளையாட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாம் ஏற்பட்டுள்ளது.
இதில் மர்ம நபர் ஒருவர் டேக் ஆப்பை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். அதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து அவர்கள் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அவரது மறைவுக்கு ராப் இசைக்குழுவினர் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.