பிராட்ஃபோர்டில் பயங்கர விபத்து: இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்துக்கு பிறகு இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை விபத்து
ஞாயிற்றுக்கிழமை மாலை பிராட்ஃபோர்டில்(Bradford) வெள்ளி நிற டொயோட்டா யாரீஸ் கார்(silver Toyota Yaris) ஒன்று மோதியதில் இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறை அதிகாரிகளுக்கு, ராம்சே தெருவின் சந்திப்புக்கு அருகில் உள்ள ரான்ஸ்டேல் சாலையில் மாலை 6:32 மணியளவில் விபத்து நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உடனடியாக இரண்டு குழந்தைகளையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. மற்றொரு குழந்தையின் காயம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
சாரதி கைது
டொயோட்டா யாரீஸ் காரின் சாரதி என்று நம்பப்படும் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் இருந்தால், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |