பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் நடத்திய வான் வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும், ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு நாடுகளுக்கு கத்தார் அழைப்பு விடுத்தது, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் உள்ள உர்குன் மாவட்டத்தில், பாகிஸ்தான் விமான படை குண்டு வீசியது.
3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 3 கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நட்பு ரீதியிலான போட்டியில் பங்குபெற்ற உர்குன்சென்று விட்டு, அங்கிருந்து வீடு திரும்புவதற்காக ஓரிடத்தில் காத்திருந்த போது நடந்த தாக்குதலில் கொல்லபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில், அடுத்த மாதம் பாகிஸ்தானில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாடுவதாக இருந்த முத்தரப்பு தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
I am deeply saddened by the loss of civilian lives in the recent Pakistani aerial strikes on Afghanistan. A tragedy that claimed the lives of women, children, and aspiring young cricketers who dreamed of representing their nation on the world stage.
— Rashid Khan (@rashidkhan_19) October 17, 2025
It is absolutely immoral and…
மேலும், இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |