2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு - சாதித்தது என்ன?
2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்திற்கான நோபல்
1901 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியல் இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த பிலிப் அகியோன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்து ஜோயல் மோகிர் மற்றும் பீட்டர் ஹொவிட் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதித்தது என்ன?
அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்கியதற்காக இந்த மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 13, 2025
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2025 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel to Joel Mokyr, Philippe Aghion and Peter Howitt “for having explained innovation-driven economic growth” with one half to Mokyr… pic.twitter.com/ZRKq0Nz4g7
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைகளைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
"கிரியேட்டிவ் டிஸ்ட்ரக்ஷன்" எனப்படும் ஆக்கப்பூர்வ அழிவு மூலம் நிலையான வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்ததற்காக பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹொவிட் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி அன்று தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.10.41 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |