இந்திய அணியில் தவான்,ஸ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜூக்கு கொரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்றிருந்த மூன்று வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் திகதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் அகமதாபாத்திற்கு வரவழைக்கப்பட்டு பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தின் போது ஒவ்வொரு நாளும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற பரிசோதனையில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேர் உட்பட 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.