3 மாத குழந்தையை கடித்து குதறிய நாய்.. துடி துடித்து இறந்த பிஞ்சு!
அயர்லாந்தில் நாய் தாக்கியதில் 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Waterford கவுண்டி, Clashmore கிராமத்தில் ஒரு வீட்டிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை நாய் 3 மாத குழந்தையை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவரச உதவி குழுவினர், படுகாயமடைந்த நிலையில் இருந்த குழந்தையை மீட்ட அருகில் உள்ள CORK பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், 3 மாத பெண் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.