பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கொலைகள்: 3 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்
பிரித்தானியாவில் கேம்பிரிட்ஜ்ஷயரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவர் கொலை
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள Bluntisham மற்றும் Sutton ஆகிய இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மார்ச் 29ம் திகதி இரவு அரங்கேறிய வன்முறை தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இரவு 9 மணிக்கு மேல் ப்ளூண்டிஷாமில் உள்ள மெரிடியன் குளோஸில் உள்ள சொத்துக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர், அதிலிருந்து 7 நிமிடங்களுக்கு பிறகு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக நபர் ஒருவர் சுட்டன் பகுதியில் இருந்து காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார்.
Skynews
இதனை தொடர்ந்து இரண்டு சம்பவ இடங்களுக்கும் விரைந்த பொலிஸார், 32 வயது மற்றும் 57 வயதுடைய நபர்களின் சடலங்களை கைப்பற்றினர். மேலும் அவர்கள் தாக்குதல் இலக்குகள் என்றும் பொலிஸார் விவரித்தனர்.
மூவர் கைது
இந்நிலையில், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷயரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Skynews
வியாழக்கிழமை அதிகாலை கேம்பிரிட்ஜில் 27 வயதுடைய ஆண் ஒருவரையும் 33 வயதுடைய பெண் ஒருவரையும் முதலில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பின் வோர்செஸ்டரில் 66 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த கொலைகளுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் மற்றும் துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த மூவரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Skynews