கோலிக்கு பின் கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள் இவர்கள் தான்! ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் கோலி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பின் யார் கேப்டன் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார்.
கோலியின் அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சிலர் இது ஒரு நல்ல முடிவு என்று அவரை பாராட்டி வருகின்றனர்.
மேலும், பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, டி20-யில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, கேப்டனாகவும் கோலியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. இது அவருடைய தனிப்பட்ட முடிவு, நாங்கள் இதை மதிக்கிறோம், நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையை அவரால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோலியின் இந்த முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஒப்புக் கொண்டதாகவும் கூறினார். இதனால் தற்போது கோலிக்கு பின் யார் டி20 அணியின் கேப்டன் ஆக இருக்க வாய்ப்புள்ளது என்ற விவாதம் கிளம்பிவிட்டது.
இதில் பிசிசிஐ-ன் முதல் தேர்வு ரோகித் சர்மாவாகத் தான் இருக்க முடியும். ஏனெனில் டி20-ஐ பொறுத்தவரை ரோகித்சர்மாக கேப்டன் மற்றும் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
அப்படி அவர் விரும்பவில்லை என்றால், இவருக்கு அடுத்த படியாக கே.எல்.ராகுலுக்கு கொடுக்க அதிகா வாய்ப்பிருக்கிறது. இவர் அணியின் இளம் வீரர், தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவரை கேப்டனாக நிர்வகித்தால், அடுத்து வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டன் ஆக மாறலாம்
இதைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் இல்லையென்றால், மூன்றாவதாக ரிஷப் பாண்ட் இதில் வருவார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பான கேப்டன்சிப்பை ரிஷப் பாண்ட் செய்து வருகிறார்.
அவர் தலைமையிலான டெல்லி இந்த முறை(2021 ஐபிஎல்) புள்ளிப் பட்டியலில் முதல் பாதியில் முதல் இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி இவரும் இளம் வீரர் என்பதால், இவருக்கு கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும், இந்த மூன்று பேரில் தான் ஒருவர் அடுத்த டி20 கேப்டன் என்பதை அடித்து சொல்லலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு டி20 உலகக்கோப்பை முடியும் வரை காத்திருக்க வேண்டும்.