சனி பகவானின் அருளாசியை பெற்ற 3 ராசிகள்
சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
இவர், ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்கள் பயணம் செய்யக் கூடியவர் இவருடைய தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
சனிபகவான் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த புத்தாண்டான 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட 3 ராசிகள் அருள் ஆசியை பெறப்போகின்றனர்.
1. மேஷம்
சனி பகவானின் பயணம் மேஷ ராசியினருக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பண வரவு இருக்கும்.
மேலும், புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.புதிய ஒப்பந்தங்கள் முடிக்கப்படும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
2. ரிஷபம்
சனிபகவான் ரிஷப ராசியினருக்கு பல்வேறு விதமான சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். சுக்கிரன் பகவானின் ஆட்சியில் ரிஷப ராசிக்காரர்கள் இருந்து வருகின்றனர். சனி பகவான் சுக்கிரனின் நட்பு கிரகம் என்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
அவருடைய கருணை ரிஷப ராசியினருக்கு கிடைக்கும். புதிதாக வேலை வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
3. மகரம்
சனிபகவான் மகர ராசியினருக்கு அதீத பலன்களை கொடுக்க போகின்றார். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
மேலும், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் மீட்டெடுக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |