ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை எங்கே? பரிசீலனையில் 3 நாடுகள்
ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு 3 நாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஈரான் - அமெரிக்கா 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈரான் மற்றும்அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனால், ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிடப்போவதாக டிரம்ப் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் திகதி, போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாவதற்குள் ஒரு தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் அதிகாரிகள் திரைமறைவில் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இரு நாடுகளும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஓரளவுக்கு முன்வந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தோன்றியதாக ஈரான் தரப்பிலிருந்து சென்ற கல்வியாளர் முகமது மராண்டி குற்றம் சாட்டினார்.
அதேவேளையில் வேறு இடங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
ஜெனீவா
இதில், சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவும் பரிசீலனையில் உள்ளது.

நுட்பமான பேச்சுவார்த்தைகளை நடத்திய நீண்டகால அனுபவம், அரசியல் நடுநிலைமை காரணமாக ஜெனீவாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்தான்புல்
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லும் பரிசீலனையில் உள்ளது. துருக்கி தன்னை ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக நிலைநிறுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத் இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக, இஸ்தான்புல் ஒரு சாத்தியமான இடமாக விவாதிக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள அதன் புவியியல் அமைவிடம், முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தும் திறன் ஆகியவை காரணமாக இஸ்தான்புல் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |