புத்தாண்டில் குருவின் நேரான பயணம்.., அதிஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்
மங்களநாயகனாக விளங்கி வரும் குருபகவானின் இடமாற்றம் நவகிரகங்களின் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குரு பகவான் விளங்கி வருகிறார்.
குரு தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் டிசம்பர் 31ஆம் திகதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
ஜனவரி 1-ம் திகதி முதல் குரு நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது.
மிதுனம்
குரு பகவான் இந்த புத்தாண்டில் மிதுன ராசியினருக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பழைய நண்பர்களால் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து சிக்கல்கள் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
குருபகவான் நேரான பயணத்தால் கடக ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்த புத்தாண்டில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் விட்டு விலகும்.
எதிர்பார்த்து காத்து இருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். முக்கிய நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மேஷம்
குரு பகவானின் நேரான பயணம் மேஷ ராசியினருக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் நற்பெயர் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ஆளுமை திறன் அதிகரிக்கும். சிறப்பான விஷயங்களுக்கு உங்களுடைய நேரம் செலவாகும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |