கனடாவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 30 வயது பெண் மரணம்! நடந்தது என்ன?
கனடாவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சஸ்கடூனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிசாரால் கைது செய்யப்பட்ட 30 வயதான பெண்ணுக்கு திடீரென மருத்துவ உதவி தேவைபட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 24ஆம் திகதி அவர் பேட்டல்போர்ட்ஸ் யூனியன் மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் 10.30 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பெண் கைதியின் திடீர் மரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு சுயாதீன பார்வையாளரை நியமிக்கவும் நீதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.