பாக்தாத் மார்கெட்டில் நடந்த பயங்கரம்! கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்கள்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பாக்தாத்தின் Sadr சிட்டி பகுதயில் உள்ள மார்கெட்டில் திங்கட்கிழமை மாலை இந்த பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.
ஈத் பெருநாளை முன்னிட்டு பொருட்களை வாங்க மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதிய நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், பலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த நபர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தில் இருந்த போது தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக ஐ.எஸ் தெரிவித்துள்ளது.
இத்தாக்குலுக்கு ஈராக் ஜனாதிபதி Barham salih கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.