சட்டவிரோதமாக குடியேறிய 35,000 புலம்பெயர்ந்தோரை கைது செய்த நாடு!
துருக்கி நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 35,000 புலம்பெயர்ந்தோர் 2 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதிகரிக்கும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை
துருக்கி நாட்டிற்கு பக்கத்து நாடுகளில் இருந்து புலம்பெயர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அந்நாடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் உள்துறை அமைச்சகம் கூறும்போது, கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 35,000 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
AP photo/Adel Hana
மேலும் 16,018 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க, அங்குள்ள கடற்கரை சுற்றுலா படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நடமாடும் மையங்கள்
இதற்கிடையில், இஸ்தான்புல் நகரில் புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தின் 9 நடமாடும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவை சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணிப்பதற்காக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
APRN
இந்த விடயம் குறித்து உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறுகையில், 'புலம்பெயர்ந்தோர் மேலாண்மை அலுவலகத்தில் புலம்பெயர்ந்தோரின் கை ரேகை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதனை 39 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |