ஐரோப்பிய நாடொன்றில் நிலநடுக்கம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Italy Earthquake
By Balamanuvelan Aug 01, 2026 05:09 AM GMT
Report

இத்தாலி நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் நிலநடுக்கம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு | 4 7 Magnitude Earthquake Hits Italy

இத்தாலி நாட்டில் நிலநடுக்கம்

இத்தாலி நாட்டிலுள்ள Naples நகரத்துக்கு மேற்கே, நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 7.46 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து பாறைகள் பெயர்ந்து விழுந்ததில், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பல சேதமடைந்துள்ளன.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட, மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். சில இடங்களில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, இரவு 10.00 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது.  

ஐரோப்பிய நாடொன்றில் நிலநடுக்கம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு | 4 7 Magnitude Earthquake Hits Italy

ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கம்

விடயம் என்னவென்றால், பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 4.0 முதல் 4.9ஆக பதிவாகும் நிலநடுக்கம் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறப்படுவதுண்டு.

ரிக்டர் அளவுகோலில் 6.0 முதல் 6.9ஆக பதிவாகும் நிலநடுக்கத்தை வலிமையானது என்றும், ரிக்டர் அளவுகோலில் 7.0 முதல் அதற்கு அதிகமான அளவாக பதிவாகும் நிலநடுக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

என்றாலும், எவ்வளவு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதோ, அதற்கேற்ப பாதிப்பும் இருக்கும் என்பதும் உண்மை. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

அதாவது, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கத்தை விட, குறைந்த ஆழத்தில் உருவாகும் நிலநடுக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதனால்தான், இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இம்முறை உருவான நிலநடுக்கம், வெறும் 3 மீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.

ஆக, இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், 40 ஆண்டுகளில் இதுதான் வலிமையான நிலநடுக்கம் என்கிறது துறைசார் நிறுவனம்.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 4 பேர் காயமடைந்துள்ளனர். என்றாலும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாறைகள் பெயர்ந்து விழுந்து கார்கள் நசுங்கிக் கிடக்கும் காட்சிகளும், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதையும், அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளுக்கு ஓடும் காட்சிகளும் வெளியாகிவருகின்றன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US