தொடரும் ஐ.எஸ் அட்டூழியம்.. நள்ளிரவு நடந்த பயங்கர தாக்குதல்! பீதியில் உறைந்த மக்கள்
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மொசூலுக்கு தெற்கே உள்ள மக்மூர் பகுதியில் இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கர தாக்குதலில் குக்கிராமத்தின் மேயர், காவல்துறை அதிகாரி மற்றும் pro-Iran Popular Mobilization Unit (PMU) போராளி உட்பட நான்கு பேரை கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
நள்ளிரவு 2:00 மணிக்கு PMU பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி Salih al-Jiburi கூறினார்.
வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் தாக்குதலில் நடத்தினர் நள்ளிரவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் அக்கிராம மக்கள் பீதியில் உறைந்தனர் என Salih al-Jiburi கூறினார்.
வடக்கு நகரமான கிர்குக் அருகே தாக்குதல் நடத்தி ஈராக்கிய மத்திய பொலிஸ் படையைச் சேர்ந்த 13 பேரை படுகொலை செய்த ஒரு வாரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.