விமானம் அவசரமாக தரையிறக்கியதால் ஏற்பட்ட விபரீதம்! பலர் பலியான சோகம்
சைபீரியாவில் இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதையடுத்து 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு சைபீரியாவில் உள்ள வனப்பகுதியில் நேற்று 14 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுடன் ஒரு சிறிய ரஷ்ய பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட விமான கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கபட்டது.
இர்குட்ஸ் நகரிலிருந்து புறப்பட்ட எல் -410 ரஷ்ய பயணிகள் விமானம் 14 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுடன் ஒரு சிறிய ரஷ்ய விமானம் புறப்பட்டது.
இந்நிலையில் கசசின்கோய் கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.
விமானத்தின் முக்கிய உபகரணங்கள் செயலிழந்துவிட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.