ரஷ்யாவினால் 4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்! ஜெலென்ஸ்கி வேதனை
ரஷ்யாவின் தாக்குதலால் 4 மில்லியன் உக்ரேனிய மக்கள் மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
இதுபோன்ற மின்தடைகளை குறைக்க மாநிலத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் நாங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம் - ஜெலென்ஸ்கி
ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் 4 மில்லியன் உக்ரேனிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் 8 மாதகால தாக்குதலால், உக்ரேனிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், உக்ரைனின் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
உக்ரைனின் மின்சார உள்கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளானதால், சுமார் 4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை உக்ரைன் பயன்டுத்தி நாட்டு மக்களுக்கு உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
AP
இதற்கிடையில், உக்ரைனை படைகள் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிக்க ரஷ்யா இந்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
Reuters