குடும்பமாக சுற்றுலா சென்ற 4 ரஷ்ய பயணிகளுக்கு நேர்ந்த துயரம்! ரிசார்ட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அல்பேனியாவில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ரஷ்ய சுற்றுலா பயணிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் ஒரு வாரமாக தங்கி சுற்றுலா இடங்களை ரசித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று குடும்பத்தினர் ஹோட்டலின் ரூமில் இருந்து குடிக்க ஜூஸ், டீ, காபி போன்ற பானங்களை ஆர்டர் செய்துள்ளனர்.
இதையடுத்து ஹோட்டலின் ஊழியர் பலமுறை கதவை தட்டியும் அவர்கள் திறக்கப்படாத காரணத்தினால் வேறு வழியின்றி மற்றொரு சாவியை கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
அங்கே 2 பேர் படுக்கையிலும், மற்றும் 2 பேர் இருக்கையிலும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக அல்பேனிய பொலிஸ் வெளியிட்ட அறிக்கையில், ரிசார்ட்டில் இறந்து கிடந்த நான்கு பேரும் ரஷ்யாவை சேர்ந்தவர்கள்.
இறந்தது 60 மற்றும் 59 வயதுடைய தம்பதி, அவர்களது மகள் கத்யா மற்றும் 31 வயதுடைய நண்பர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.