கத்தாரில் கேரள குழந்தை உயிரிழந்த சோகம்; மழலையர் பள்ளி அடைப்பு
கத்தாரில் கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தை பள்ளி வேனில் அடைக்கப்பட்டதால் மரணம்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கத்தாரில், இந்தியாவன் கேரளாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த மழலையர் பள்ளி கத்தார் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த கேஜி 1 மாணவி மின்சா மரியம் ஜேக்கப் (Minsa Mariyam Jacob), கத்தாரில் உள்ள அல் வக்ராவில் பள்ளி பேருந்திற்குள் பல மணிநேரம் பூட்டப்பட்டதால் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்ட பள்ளி வேனில் விட்டுச் செல்லப்பட்ட அவர் மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அல் வக்ராவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் (MoEHE) முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
asianetnews
“விசாரணையில் தொழிலாளர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மாணவி ஒருவரின் மரணத்துடன் சமூகத்தை உலுக்கிய சோகமான விபத்தை கண்ட தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. நமது பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் புதுப்பிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
after the investigation proved the negligence of the workers, who were subjected to the most severe penalties. The Ministry renews its commitment to ensuring the safety and security of our students in our various educational institutions.
— وزارة التربية والتعليم والتعليم العالي (@Qatar_Edu) September 13, 2022
தனியார் மழலையர் பள்ளியில் குறைந்த பணியாளர்களே உள்ளனர் என்பதால் இந்த மரணம் நிகழ்ந்தது என்று அது மேலும் கூறியது.
மின்சா ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்தில் ஏறியதாகவும் ஆனால் பள்ளிக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்ததாகவும் குழந்தையின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. குழந்தை பேருந்தின் உள்ளே இருப்பதை அறியாமல் வாகன ஊழியர்கள், பேருந்தை பூட்டிவிட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு நகர்த்திவிட்டு சென்றனர். பிற்பகலில் அவர்கள் வாகனத்திற்குத் திரும்பியபோது, 4 வயது சிறுமி சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட பணியாளர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
கடும் வெப்பத்தில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, மின்சாவின் அஸ்தி விமானம் மூலம் கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்கவனத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.