40 பில்லியன் டொலர் பிழை., 6,20,000 Bitcoin-களை தவறுதலாக அனுப்பிய நிறுவனம்
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜ் நிறுவனமொன்று, 40 பில்லியன் டொலர் மதிப்பிலான 6,20,000 Bitcoin-களை தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் பிரபலமான Bithumb கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜ் நிறுவனம், வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறாகக் கருதப்படும் 40 பில்லியன் டொலர் மதிப்புள்ள பிட்காயின்களை தவறுதலாக பயனர்களின் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளது.
அறிக்கையின்படி, நிறுவனம் 6,20,000 பிட்காயின்களை (Bitcoin) தவறான முறையில் பயனர்களின் வாலெட்டுகளுக்கு அனுப்பியது. இது, தொழில்நுட்ப பிழை காரணமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Bithumb என்பது தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் நிறுவனமாகும். Upbit முதலிடத்தில் உள்ளது.

பயனர்கள் தங்கள் கணக்குகளில் திடீரென மிகப்பெரிய அளவில் பிட்காயின்கள் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் உடனடியாக அந்த நாணயங்களை மாற்ற முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், நிறுவனம் விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த பரிமாற்றங்களை திரும்பப் பெற்றது.
Bithumb நிறுவனம், “இது ஒரு சிஸ்டம் பிழை காரணமாக ஏற்பட்டது. பயனர்களின் சொந்த நிதி பாதுகாப்பாக உள்ளது. எந்தவித இழப்பும் ஏற்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேன்ஜ்களில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இத்தகைய பிழைகள், கிரிப்டோ சந்தையின் மீது மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும். அதனால், நிறுவனங்கள் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |