ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா தலைமையில் 40 நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதி
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மாற்றம் இஸ்ரேலின் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், பிரித்தானியா தலைமையிலான 40 நாடுகளின் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் உலகப் பொருளாதாரத்தை பணயம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய பாதை என்பதால், அதன் முடக்கம் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
இந்த கூட்டத்தில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. ஜனாதிபதி ட்ரம்ப், “நீர்வழிப் பாதையைப் பாதுகாப்பது அமெரிக்காவின் வேலை அல்ல” எனக் கூறியுள்ளார். இதனால், ஐரோப்பிய கூட்டாளிகள் தாங்களே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள், “ஈரான் தடையை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி, பாதுகாப்பான கடல் போக்குவரத்துக்கான முயற்சிகளில் பங்கேற்க உறுதியளித்துள்ளன.
ஆனால், எந்த நாடும் தற்போது இராணுவ ரீதியாக நீரிணையை திறக்க முன்வரவில்லை. ஈரான், ஏவுகணைகள், ட்ரோன்கள், கடற்படை தாக்குதல்கள் மூலம் கப்பல்களை குறிவைக்கக்கூடியதால், நேரடி இராணுவ நடவடிக்கை அபாயகரமாகக் கருதப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இது எளிதானது அல்ல. போருக்குப் பிறகு கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, இராணுவ வலிமையும், தூதரக நடவடிக்கைகளும் ஒன்றிணைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “இராணுவ நடவடிக்கை யதார்த்தமற்றது. ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும்” என வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |