மெகா திருமண மோசடி - மணப்பெண் வராமல் ஏமாந்த 42 மணமகன்கள்
மணப்பெண் வராமல் ஏமாந்த 42 குடும்பங்கள் ஏமாந்துள்ளன.
மெகா திருமண மோசடி
மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 42 இளைஞர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமகன்களின் மொபைல் போன்களுக்குப் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் அனைவரும் ஆதரவற்ற பின்னணியைச் சேர்ந்தவர்கள், உடனடியாகத் திருமணம் செய்யச் சம்மதிப்பதாக இடைத்தரகர்கள் நம்ப வைத்துள்ளனர்.

இதற்காக மணமகன்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கூட்டுத் திருமண விழா ஏற்பாட்டிற்காக ரூ. 25,000 வரை வசூலித்துள்ளனர்.
மேலும், திருமணத்தன்று மணமேடையில் வைத்து உங்களுக்கு வரதட்சிணை எல்லாம் வழங்கப்படும், அதற்கு முன்னர் வீட்டில் மெஹந்தி போன்ற எந்த சடங்குகளும் வேண்டாம் அதனை மேடையில் வைத்து நடத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
ஏமாந்த 42 குடும்பங்கள்
தங்களுக்கு திருமணம் நடக்க போவதாக நம்பிய மணமகன்கள் வாடகைக்கு கார்களை எடுத்துக்கொண்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, திருமணம் நடைபெற இருந்த தேவாஸ் பகுதிக்கு சென்றுள்ளனர்.
ஆனால் காலையில் இருந்து மாலை வரை மணமகன்களின் தரப்பினர் காத்திருந்த நிலையில், மணப்பெண் என வேற யாருமே அங்கு வராததால் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
திருமண ஏற்பாடு செய்த இடைத்தரகர்களின் செல்போனும் அணைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த புகைப்படங்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் இருந்து பெறப்பட்ட மாடல்களின் புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அங்கு ஏமாந்த இளைஞர் ஒருவரின் சகோதரி, நாங்கள் உறவினர்கள் முன்னாள் அசிங்கப்பட்டு நிற்கின்றோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக முகேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |