அனுமன் கோவில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
அனுமன் கோவிலில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 பேர் உயிரிழப்பு
மஹாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள அனுமன் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது.

மாலை 3;30 மணியளவில், கட்டுமான பணியில் இருந்த கோவிலின் சபா மண்டபத்தின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
CCTV footage of the #accidentes
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) June 20, 2026
Accident in Maharashtra's Parbhani district: Roof collapses at the Hanuman temple in Yashwadi village.
In this tragic incident, five to six bodies have been recovered from the debris of the pavilion so far.#Parbhani #CCTV #Maharastra pic.twitter.com/3Sr04CEH0D
இதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
परभणी जिल्ह्यातील यशवाडी येथील हनुमान मंदिरातील घटनेबाबत मुख्यमंत्री श्री देवेंद्र फडणवीस यांनी तीव्र दु:ख व्यक्त केले असून, मृतांच्या कुटुंबीयांना 5 लाख रुपये आर्थिक मदत राज्य सरकारतर्फे देण्यात येईल, असे जाहीर केले आहे.@Dev_Fadnavis https://t.co/46sPD5ngFe
— CMO Maharashtra (@CMOMaharashtra) June 20, 2026
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |