ஈத் பெருநாளை கொண்டாடிய குடும்பம்! திடீரென ராக்கெட் தாக்குதலால் அனைவரும் பலியான சோகம்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலால் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
தொடர்ந்து ஏழாவது நாளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஈத் பெருநாளன்று நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
இத்தாக்குதலில் அக்குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர்பிழைத்துள்ளது, அந்நேரம் குடும்பத்தலைவரான முகமது அல்-ஹதிதி வீட்டில் இல்லாததால் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளார்.
அவர் ராய்ட்டர்ஸ்-க்கு அளித்த பேட்டியில், அந்த இடத்தில் ராக்கெட் எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். அமைதியான குழந்தைகள் ஈத் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். இத்தகைய கொடுமையை அனுபவிக்கும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் குழந்தையின் தொடை எலும்பு முறிந்து இருந்ததாகவும், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.