ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட வாகனங்கள்! பாரிய விபத்தில் மூவர் பலி
மியான்மர் நாட்டில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பலியாகினர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
பாரிய சாலை விபத்து
மியான்மரின் யாங்கூன் - மண்டலே நெடுஞ்சாலையில் காலை வேளையில் பாரிய சாலை விபத்து ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக முன்னால் சென்ற கார்கள் வேகத்தைக் குறைக்க பிரேக் போட்டது. அப்போது பின்னால் வந்த எக்ஸ்பிரஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இச்சம்பவத்தில் மூன்று பேர் உயிழந்தனர். அவர்களில் இருவர் ஆண்கள் என்றும், ஒருவர் பெண் என்றும் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்
மூவர் பலி
அத்துடன் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மீட்பு அமைப்பின் அதிகாரி சின்ஹுவா கூறும்போது,
இந்த விபத்து இரண்டு எக்ஸ்பிரஸ் கார்களுக்கு இடையில் சிக்கிய மூன்று சிறிய வாகனங்களை பாதித்தது. காயமடைந்தவர்களில் 8 வயது குழந்தை ஒன்றும் அடங்கும். பாதிக்கப்பட்டவர்கள் Taungoo பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் அனைவரும் மூன்று சிறிய வாகனங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
Representative image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |