தமிழ் புத்தாண்டு பலன்கள்.., பணமூட்டையை அள்ளப்போகும் 5 ராசிகள்
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத முதல் நாளில் பிறக்கின்றது.
அந்தவகையில், ஏப்ரல் 14ஆம் திகதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகும் நிலையில், விசுவாசுவ வருடம் பிறக்கும்.
இதனால் ஏற்படும் யோகங்கள் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும்.
ரிஷபம்
பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். திடீர் வருமான உயர்வையும் காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். வாழ்க்கையில் சில பெரிய வெற்றிகளை அடைவீர்கள்.
கடகம்
கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி பெறும். தனியார் வேலை செய்பவர்களுக்கு சூரியனின் தாக்கத்தால் பெரிய வாய்ப்பு கிடைக்கும். அதிகாரமும் பதவியும் பெறுவீர்கள். உங்களுக்குப் புகழும் நிறையப் பணமும் கிடைக்கப் போகிறது. கடந்த சில மாதங்களில் உங்களின் கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவீர்கள்.
துலாம்
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். கடந்த சில நாட்களாக திருமண வாழ்க்கையில் பதற்றம் நிலவி வருகிறது. இப்போது அது முடிவடையும். வருமானத்தை பெருக்குவதில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்
வீடு, வாகனம் என ஆடம்பரம் மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் கிடைக்கும். வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்கலாம். வேலையில் இருப்பவர்களின் செயல்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இந்தக் காலத்தில் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.
கும்பம்
வேலையில் வெற்றி பெறுவார்கள். உங்கள் பொழுதுபோக்குகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் துணிச்சலான முடிவுகளால் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட காரியம் அனைத்தும் நிறைவேறும். பண வரவு மூலம் பொருளதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |