ஆப்கானில் கொட்டித்தீர்த்த கனமழை! வெள்ளத்திற்கு 50 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 50 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானின் தலைநகர் காபூல் உட்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் வீடுகளையும் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |