கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிரித்தானியாவிலிருந்து எத்தனை பேர் அமைதியாக நாடுகடத்தப்பட்டார்கள் தெரியுமா?
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுமார் 500 பேர் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 227 பேர் வெளிநாட்டுக் குற்றவாளிகள், 306 பேர் புலம்பெயர்தல் குற்றங்கள் செய்தவர்கள்.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவைவிட்டு வெளியேற்றியே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட பிரீத்தி பட்டேல் பதவியிலிருந்து விலகினாலும், நாடுகடத்துதல் அமைதியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 500க்கும் அதிகமானோர் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 227 பேர் வெளிநாட்டுக் குற்றவாளிகள், 306 பேர் புலம்பெயர்தல் குற்றங்கள் செய்தவர்கள்.
அவர்கள் ரொமேனியா மற்றும் ஜிம்பாபே முதலான நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 7,767 என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Alamy