ரஷ்யா நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து! உடல் கருகி 14 பேர் பலி
ரஷ்யாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் சைபீரியா நகருக்கு அருகே உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீயில் உடல் கருகி 52 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 49 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரிச் சுரங்கத்தில் வெளியான மீத்தேன் வாயு தீப்பற்றி வெடித்ததை தொடர்ந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சுரங்கத்துக்குள் ஆக்சிசன் இல்லாததால் சுவாசிக்க முடியாமல் தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நிலக்கரி சுரங்கத்தில் பற்றிய தீ காரணமாக ஏற்பட்ட வாயுக்கள் சுரங்கப் பகுதியில் சூழ்ந்துள்ளன அவை எந்த நிமிடமும் விழித்து மீண்டும் சுரங்கத்தில் மற்றொரு பெரிய தீவிரத்தை உருவாக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.