காசாவில் உணவு பஞ்சம்; 5 ரூபாய் பார்லே ஜி பிஸ்கட்டை ரூ.2400 க்கு விற்கும் கொடூரம்
காசாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 5 ரூபாய் பார்லே ஜி பிஸ்கட்டை ரூ.2400 க்கு விற்கப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
கடந்த 2023 ஆம் ஆண்டு, காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, 252 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.
இதன் காரணமாக,ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில், இதுவரை 60,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் எனக் கூறி காசாவின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், பிறநாடுகளில் இருந்து காசாவிற்கு வரும் உதவிப்பொருட்களை நிறுத்தியுள்ளது.
இதனால், உணவு கிடைக்காமல், 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐநா கவலை தெரிவித்தது.
பார்லே ஜி பிஸ்கட் ரூ.2400
இந்நிலையில், பல மாதங்கள் எல்லை மூடப்பட்டுள்ளதால் காசாவில் உள்ள உணவுப்பொருட்களின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ரூ.5க்கு விற்கப்படும் பார்லே ஜி பிஸ்கட், காசாவில் ரூ.2400 க்கு விற்கப்படுகிறது.
இது தொடர்பாக காசாவில் உள்ள ஒருவர் வெளியிட்ட பதிவில், "நீண்ட காத்திருப்பிற்கு பின்னர், இன்று ரஃபிஃபுக்கு பிடித்த பிஸ்கட்களை பெற்றேன். விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரஃபிஃபுக்கு அவளுக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
After a long wait, I finally got Ravif her favorite biscuits today. Even though the price jumped from €1.5 to over €24, I just couldn’t deny Rafif her favorite treat. pic.twitter.com/O1dbfWHVTF
— Mohammed jawad 🇵🇸 (@Mo7ammed_jawad6) June 1, 2025
அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிஸ்கட் மட்டுமின்றி, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ சர்க்கரை 4,914 ரூபாய்கும், 1 கப் காபி ரூ.1,800 ரூபாய்கும் விற்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |