18 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த 6 ஜேர்மனியர்கள் தீவு ஒன்றில் கைது!
ஸ்பெயின் மல்லோர்கா தீவில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 6 ஜேர்மனியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள்
மல்லோர்கா தீவில் பிரபலமான சுற்றுலாத் தலமான பிளாயா டி பால்மாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் 18 வயது ஜேர்மன் பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள் 6 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20, 21 வயதுடைய இளைஞர்களும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது.
இளம்பெண்ணின் வாக்குமூலம்
குறித்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில், நண்பர்கள் குழுவுடன் தீவுக்கு சுற்றுலா வந்த அவர் ஜேர்மனியர் ஒருவரை சந்தித்துள்ளார். மது அருந்திவிட்டு அவரது அறைக்கு உடன் சேர்ந்து சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் அப்பெண்ணை அவர்கள் 6 பேரும் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண், வரவேற்பு அறைக்கு விரைந்து வந்து பொலிஸாரை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 5 மணிநேரத்தில் பொலிஸார் ஹொட்டலில் இருந்த ஐந்து பேரையும் கைது செய்தனர். பின்னாளில் தப்பியோடிய ஒருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் சமீபத்திய ஆண்டுகளில் பல கூட்டு பலாத்கார சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |