தாய்நாட்டை காக்க பறந்து வந்த உக்ரைனியர்கள்: யாராலும் வெல்ல முடியாது என அமைச்சர் கருத்து!
வெளிநாட்டில் வசிக்கும் உக்ரைனியர்களில் இதுவரை 66,224 பேர் தாய்நாட்டிற்கு திரும்பி, ரஷ்யாவிற்கு எதிரான போரில் கலந்து கொண்டுள்ளனர் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவ தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் ஷெல் தாக்குதலில் அழிக்கப்பட்டு இருந்தாலும், ரஷ்ய ராணுவத்தின் கடுமையான தாக்குதலை சமாளித்து இன்னமும் உக்ரைன் சரணடையாமல் தொடர்ந்து தங்கள் நாட்டை பாதுகாத்து வருகின்றனர்.
66224. That's how many men returned from abroad at this moment to defend their Country from the horde. These are 12 more combat and motivated brigades ??! Ukrainians, we are invincible! #FightLikeUkrainian
— Oleksii Reznikov (@oleksiireznikov) March 5, 2022
இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்துடன் உக்ரைன் மக்களும் தங்கள் தாய் நாட்டை பாதுகாப்பதற்காக போரில் இறங்கியதே முக்கிய காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை எதிர்த்து வெளிநாட்டில் வாழும் உக்ரைனியர்கள் இதுவரை 66,224 நபர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வந்து ரஷ்யாவிற்கு எதிரான இந்தப்போரில் கலந்து கொண்டுள்ளனர் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனியர்களை யாராலும் வெல்ல முடியாது என்ற கருத்தையும் உக்ரைனின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.