நள்ளிரவில் பயங்கர தீ விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலியான சோகம்
பாகிஸ்தானில் வீடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனிடையே வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒன்றுதிரண்டு உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் பொது மக்கள் அனைவரும் தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால் தீயின் விவேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு வழியாக தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெரும் தீயில் கருகி பலியாகியுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் கூறியதாவது, இந்த சம்பவத்தின் போது அந்த வீட்டில் ஏழு பேர் இருந்துள்ளனர்.
அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேருமே தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.