60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்
இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்
இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கையானது 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் ராணுவத்தினர் தரை, கடல், வான் என மும்முனை தாக்குதலை பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 7000 குடிமக்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் சிக்கித் தவிப்பதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
எகிப்து வெளியுறவு அமைச்சகத்தை சுட்டிக் காட்டி DPA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், 60 நாடுகளை சேர்ந்த சுமார் 7000 பொதுமக்கள் காசாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பிற்காக காத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த 81 பாலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு வந்துள்ளார்கள் என CNN தெரிவித்துள்ளது.
About 7,000 thousand citizens of other countries are trapped in the Gaza Strip - Egyptian Foreign Ministry
— NEXTA (@nexta_tv) November 2, 2023
About seven thousand citizens from 60 countries are waiting for an opportunity to leave the Gaza Strip, the dpa news agency reported citing the Egyptian Foreign Ministry.… pic.twitter.com/QnwXmMa9gB
இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜோர்டான், சவுதி அரேபியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் எகிப்துக்கு வந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |