50 வருடங்களாக உணவே உண்ணாமல் உயிர் வாழும் 75 வயது மூதாட்டி: சுவாரஸ்யமான பின்னணி
வியட்நாம் நாட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து மட்டுமே உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்பானம் குடித்து உயிர் வாழும் மூதாட்டி
வியட்நாம் நாட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டி யுய் தி லொய்(Bui Thi Loi), இவர் கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
75 வயது மூதாட்டி யுய் தி லொய் இவ்வாறு தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும் குடித்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்.
Photo: Tran Anh
1963ம் ஆண்டு யுய் தி லொய்-ஐ மின்னல் தாக்கி விபத்துக்குள்ளான பிறகில் இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை அவர் கைவிட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்துக்கு பிறகு யுய் தி லொய்க்கு உணவின் வாசனையே மிகப்பெரிய குமட்டலை ஏற்படுத்தியதால் உணவு உண்ணும் பழக்கத்தையே கைவிட்டுள்ளார்.
அத்துடன் தனது குடும்பத்தினருக்காக சமைக்கும் போது கூட அதன் சுவையை யுய் தி லொய் சரிப்பார்ப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: Tran Anh
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |