259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம்
Eight dead as boat capsizes off Cyprus with 267 on board: 267 பேருடன் புறப்பட்ட படகொன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது, ஆகத்து மாதம் 30ஆம் திகதி, சைப்ரஸ் நாட்டிலிருந்து துருக்கி நோக்கி படகொன்று புறப்பட்டுள்ளது.

267 பேருடன் புறப்பட்ட படகு
சைப்ரஸ் நாட்டிலுள்ள Girne துறைமுகத்திலிருந்து, துருக்கி நாட்டிலுள்ள Taşucu துறைமுகம் நோக்கி, 259 பயணிகள், 8 பணியாளர்களுடன் FILOJET என்னும் அந்தப் படகு புறப்பட்டுள்ளது.

படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களே ஆன நிலையில், சுமார் 11.30 மணியளவில், படகு அலைகளில் சிக்கியுள்ளது. முதல் அலையை சமாளித்தாலும், இரண்டாம் அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளது அந்தப் படகு.
தகவலறிந்து சைப்ரஸ் நாட்டு மீட்புப் படகுகளும் ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 249 பேர் மீட்கப்பட்ட நிலையில், எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படகு, 1,686 அடி ஆழத்தில் முழுமையாக மூழ்கிவிட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பில், படகின் கேப்டனும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |