மசூதிக்குள் புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சுட்டுக் கொலை! பிரபல நாட்டில் பயங்கரம்
ஆப்கானிஸ்தானில் ஒரு மசூதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் சனிக்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
கொல்லப்பட்டவர்களில் 5 பேர் சகோதரர்கள் என்றும் 3 பேர் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் (ஆண்கள்) என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தகவலில் இது ஒரு நில தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்ட சம்பவம் என கூறப்படுகிறது. இதுவரை சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் மிக சாதாரணமாக பழிவாங்கும் கொலைகள் நடந்துவருகிறது. பல தலைமுறைகளாக அங்குள்ள மக்கள் ஒரு பழங்கால நெறிமுறையின் அடிப்படையில் பழிவாங்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதன் மூலம் நீதியை நாடுகின்றனர்.