தந்தை ஆசையாக வாங்கிவந்த வெளிநாட்டு சாக்லேட்., 8 வயது மகனுக்கு எமனாக மாறிய சோகம்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாட்டு சாக்லேட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வெளிநாட்டில் இருந்து தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லேட் தொண்டையில் சிக்கி 8 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் சிங் என அறியப்படும் சிறுவனின் தொண்டையில் சாக்லேட் துண்டு சிக்கியபோது, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குழந்தைகளுக்கு சாக்லேட் கொண்டு வந்திருந்தார்
ClevelandClinic
பொலிஸாரின் தகவல்களின்படி, வாரங்கலில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் கங்கன் சிங்கின் குடும்பத்தில் சோகம் ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரங்கலுக்கு குடிபெயர்ந்து தனது குடும்பம் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திரும்பியபோது, கங்கர் சிங் தனது குழந்தைகளுக்கு சாக்லேட் கொண்டு வந்திருந்தார்.
பள்ளியில்
thenewsglory
இரண்டாம் வகுப்பு மாணவன் சந்தீப் சனிக்கிழமை தனது பள்ளிக்கு சில சாக்லேட்டுகளை எடுத்துச் சென்றார். வகுப்பறையில் அந்த சாக்லேட்டை வாயில் போட்டபோது, அது தொண்டையில் சிக்கியது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆசிரியர் ஒருவர் பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் சந்தீப்பை அரசு நடத்தும் எம்ஜிஹெச் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவர்கள் காப்பாற்ற முயன்ற போதும் சந்தீப் மூச்சு திணறி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.