ஒரே நாளில் 800 மரணங்கள்! கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் திணறிவரும் நாடு!
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 152,879 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரங்களில் 1 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 1.5 லட்சத்தை தாண்டி அதிகரித்துக்கொண்டே போகிறது.
இதனால் தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை (caseload) 1,108,087-ஆக உயர்ந்துள்ளது.
இது இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 7.93 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றையை நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 13.36 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 834 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்னிக்கை 1,69,275-ஆக உயர்ந்துள்ளது.