14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் : உடனடியாக பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை!
14 மணி நேரத்தில் சுமார் 800 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள்
ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கிரின்டாவிக் நகரில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்திய வானிலை அலுவலகத்தின் கூற்றுப்படி, புதன் மற்றும் வியாழன் இடையே 24 மணி நேரத்தில் சுமார் 1,400 நிலநடுக்கங்கள் அளவிடப்பட்டன.
வெள்ளிக்கிழமை முதல் 14 மணி நேரத்தில் மேலும் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை, நில அதிர்வு செயல்பாடு அதிகரித்ததால், உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான புளூ லகூன் மூடப்பட்டது.
இதன் விளைவாக மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக மக்களை பாதுகாக்கும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்க்கொண்டள்ளனர்.
மேலும் ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளன. இது ஐரோப்பில் உள்ள நாடுகளில் அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |