அமெரிக்காவில் 85 மில்லியன் பேருக்கு சூறாவளியால் ஆபத்து!
கடந்த புதன்கிழமை காணப்பட்ட மோசமான வானிலையினால் 85 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஆபத்தில் உள்ளனர்.
புயலானது அயோவா, இல்லினாய்ஸ், மிசோரி மற்றும் மிச்சிகனை தாக்கிய பிறகு மத்திய அமெரிக்கா முழுவதும் பரவிச்செல்கிறது என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கணிப்பு மையத்தின் அறிவிப்பு!
மிச்சிகனின் தாழ்ந்த பகுதி வழியாக ஆரம்பித்து கிழக்கு இல்லினாய்ஸ் முழுவதும் சூறாவளி மற்றும் பெரிய ஆலங்கட்டி மழைக்கான ஆபத்தை ஏற்படுத்தும் கடுமையான புயல்கள் இன்று ஏற்படும் என புயல் கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஓஹியோ பள்ளத்தாக்கிலிருந்து கீழ் தொடங்கி மிசிசிப்பி பள்ளத்தாக்கு வரை சேதம் ஏற்படுத்தக்கூடிய காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளிகயோடு சேர்ந்து இடியுடன் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று புயல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று குறைந்தது ஒன்பது சூறாவளிகள் பதிவாகியுள்ளன. அயோவாவில் இரண்டு மற்றும் இல்லினாய்ஸில் ஏழு உட்பட, கொலோனா நகரில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அத்தோடு I-88 இல் பல அரை டிரக்குகள் காற்றில் வீசி செல்லப்பட்டுள்ளன.
புதன்கிழமை காலை மிசோரியில் ஒரு சூறாவளி பதிவாகியுள்ளது.
பேஸ்போல் அளவிலான ஆலங்கட்டிகள்!
பாரிய, பேஸ்பால் அளவிலான ஆலங்கட்டிகள் முக்கியமாக அயோவா, இல்லினாய்ஸ், மிசோரி மற்றும் மிச்சிகன் ஆகிய இடங்களில் பெய்ந்துள்ளன.
100க்கும் மேற்பட்ட ஆலங்கட்டி மழை அறிக்கையில் பதிவாகியுள்ளன. டேவன்போர்ட், அயோவா, 4-இன்ச் பெரிய ஆலங்கட்டி மழைகள் பெய்துள்ளன. டேவன்போர்ட்டில் மிகவும் மோசமான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
“இந்த ஆலங்கட்டி மழையானது செங்கற்கள் கூரையைத் தாக்குவது போல் ஒலித்தது” என்று டேவன்போர்ட் குடியிருப்பாளர் பால் ஷ்மிட் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
"உறுதிப்படுத்தப்பட்ட பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான சூறாவளி" புதன்கிழமை அதிகாலை, மிசோரியின் க்ளெனல்லனுக்கு அருகே பதிவாகியுள்ளதாக செயின்ட் லூயிஸில் உள்ள தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
லிட்டில் ராக், ஆர்கன்சாஸ் உட்பட்ட பகுதிகள், கடந்த வாரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. “மேலும் சேதமடைந்த கட்டிடங்களில் ஒரே இரவில் தங்குவதைத் தவிர்க்கவும்“ என அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.