ஜேர்மனியில் சாலையை ஆக்கிரமித்த சைக்கிள் ஓட்டுனர்கள்! மோசமான போக்குவரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ஜேர்மனியில் கிட்டத்தட்ட 8,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சைக்கிளில் பேரணி நடத்தினர்.
மோசமான பொது போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜேர்மனியில் மோசமான பொதுப் போக்குவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான சைக்கிள் ஓட்டுநர்கள் சாலையில் பேரணியாக சென்றனர்.
சிறந்த பொது போக்குவரத்து வேண்டும் என்றும் தனியாக சைக்கிள் பாதைகள் அமைத்து தர கோரியும், ஏறத்தாழ 8,500 சைக்கிள் ஓட்டுநர்கள் நெடுஞ்சாலையை குறிப்பிட்ட தூரம் முற்றிலுமாக ஆக்கிரமித்தபடி சென்றனர்.
சைக்கிள் ஓட்டிகள் 40 கிமீ (25 மைல்கள்) தூரத்தை கடந்து, பிராங்பேர்ட் மற்றும் வைஸ்பேடன் இடையே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர், அவர்களில் சிலர் ஒன்பது மணிநேரம் வரை பயணம் செய்தனர்.
ஜேர்மன் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தின் (ADFC) தலைவரான ஃபிராங்க் மசூரத்தின் கருத்துப்படி, ''பல தசாப்தங்களாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்கள் வருடாந்திர போராட்டங்களில் சைக்கிள் போக்குவரத்திற்கான சிறந்த நிலைமைகளுக்காக போராடி வருகின்றனர்.
புதிய சைக்கிள் லேன் நெட்வொர்க் மற்றும் மொபிலிட்டி டிரான்ஸ்மிஷனுக்கான திட்டங்களை பெர்லின் செயல்படுத்துவதற்கான நேரம் இது என்பதை எடுத்துக்காட்டும் மசூரத், இது செயல்களுக்கான நேரம் என்று கூறினார்.
2026 ஆம் ஆண்டுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பான பைக் பாதைகள் நிறுவப்படும் என்று ஜேர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.