ரஷ்யாவால் உக்ரைனில் கொன்று குவிக்கப்பட்டவர்களின் இமாலய எண்ணிக்கை: ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனில் இது வரை 85000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் முனைப்பில் ரஷ்யா செயல்படுவதால் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உக்ரேனிய மக்கள் பலரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
@afp
மேலும் ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவுபடுத்த ரஷ்யா மக்கள் வாழும் நகரங்களில் குண்டு வெடிப்பு, தானியங்கி விமானம் போன்றவற்றின் மூலம் தாக்குதல் நடத்துவதால் அது பொது மக்களை பாதிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து 8,500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதிப்பு
உக்ரைன் முழுவதும் இன்னும் பல ஆயிரம் சரிபார்க்கப்படாத இறப்புகள் இருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மேலும் கூறியுள்ளது.
@afp
அதிகாரப்பூர்வமாக, பிப்ரவரி 2022 மற்றும் இம்மாதத்தில் படையெடுப்பு தொடங்கப்பட்டதற்கு இடையில் 8,490 பொதுமக்கள் இறந்துள்ளதாகவும் மற்றும் 14,244 பேர் பெரிய காயங்களோடு வாழ்ந்து வருவதாகும் ஐ.நா தெரிவித்துள்ளது.
பெரும்பாலான இறப்புகள் உக்ரேனிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்திலும், ரஷ்யப் படைகளின் தாக்குதலின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் மட்டும் 3,927 பேர் உயிரிழந்துள்ளனர்.
@afp
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக ஐ.நா-ஆணையிடப்பட்ட புலனாய்வு அமைப்பு கடந்த மாதம் கண்டறிந்துள்ளது.
பொதுமக்களை குறிவைப்பதும், அட்டூழியங்களை செய்வதாகவும் ஐ.நா கூறிய குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.