150 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து... பதறவைக்கும் தகவல்கள்
சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டுவந்த படகு ஒன்று இந்தோனேசிய கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலர் இறந்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கவிழ்ந்த படகு
இந்தோனேசியாவின் Aceh மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில், சுமார் 150 ரோஹிங்கியா அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு ஒன்று புதன்கிழமை காலை கவிழ்ந்துள்ளது.
கவிழ்ந்த படகைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தவர்கள் உட்பட, 42 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் என மொத்தம் 69 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், படகில் பயணித்த மற்றவர்களைக் காணவில்லை.
அந்த படகில் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் எதுவும் இல்லாததால், எத்தனை பேரைக் காணவில்லை என்பது சரியாகத் தெரியவில்லை.
Nelayan Aceh tolong satu boat Rohingya yang tenggelam sekitar 7 mil dari Kuala Bubon Aceh Barat Rabu 20 Maret 2024 @Refugees pic.twitter.com/Bk1AjwnDuu
— Aceh 🇮🇩🇹🇷🇵🇸 (@Aceh) March 20, 2024
உயிர் பிழைத்தவர்கள், அந்தப் படகில் 151 பேர் பயணித்ததாகக் கூறியுள்ளதால், பலர் உயிரிழந்திருக்கலாம் அல்லது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடயம் என்னவென்றால், தேடுதல் பணியை இந்தோனேசிய மீட்புக் குழுவினர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். ஆகவே, மாயமான மற்றவர்கள் நிலை என்ன ஆகும் என்பது தெரியவில்லை.
Syifa Yulinnas/Antara Foto via Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |