வேறு ஊரில் வசித்த மகன்! தாய் தங்கிய இடத்தை சிசிடிவி காட்சி மூலம் இரவில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சி
அமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயாரிடம் காப்பகத்தின் ஊழியர் தவறாக நடந்து கொண்டதை சிசிடிவி கமெரா மூலம் பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார்.
மின்னிசோட்டாவை சேர்ந்த வயதான பெண் அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அவரை கவனித்து வந்தனர். அந்த பெண் தங்கியிருந்த அறையில் அவர் மகன் சிசிடிவி கமெராவை பொருத்தியிருந்தார்.
ஏனெனில் வேறு இடத்தில் இருந்த மகன், தாயார் எப்படி இருக்கிறார் மற்றும் அவரின் உடல்நிலையை கண்காணிக்கவே கமெராவை பொருத்தியிருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் அந்த அறைக்கு வந்த காப்பக ஊழியர் அப்பெண்ணின் உடையை கழட்டி தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த காட்சியை சிசிடிவி வழியாக பார்த்த அவரின் மகன் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அங்கிருந்த ஸ்பீக்கர் மூலமாக ஒலபாமிடில் பீவாஜி என்ற அந்த ஊழியரிடம் பேசிய அவர் உடனடியாக நீ செய்யும் தவறை நிறுத்து என கத்தினார்.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் அங்கு வந்த மூதாட்டியிடம் விசாரித்தனர்.
ஆனால் மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு எல்லாமே மறந்து போனதால் நடந்ததை சொல்ல முடியாமல் குழம்பி போனார்.
இந்த நிலையில் பீவாஜி மீது பொலிசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.