மரத்திற்கு அடியில் கும்பலாக நின்றிருந்த நபர்கள் மின்னல் தாக்கி எரிந்த சிலையாக சரிந்த பயங்கரம்! சிசிடிவி-யில் சிக்கிய திகிலூட்டும் காட்சி
இந்தியாவில் மழையின் போது மரத்திற்கு அடியில் கும்பலாக நின்றுக்கொண்டிருந்த நபர்கள் மின்னல் தாக்கி சிலையாக சரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது
. குர்கான் நகரில் உள்ள Sector 82-ல் இத்துயரம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது மழை பொழிந்து கொண்டிருந்ததால், நனையாமல் இருக்க நான்கு பேரும் ஒரே மரத்தை சுற்றி நின்றுக்கொண்டிருந்துள்ளனர்.
#Watch| Deadly Lightning Strike In Gurugram Caught On Camera #Gurgaon #Gurugram #Haryana #Trending #Lightningstrikes pic.twitter.com/ffj2Pma5cw
— NewsMobile (@NewsMobileIndia) March 13, 2021
இதன்போது, திடீரென மரம் மீது மின்னல் தாக்கி தீப்பற்றியுள்ளது, இதனையடுத்து நொடிகளில் நான்கு பேரும் சிலை போல் தரையில் விழுந்து கிடந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் பயங்கர தீ காயத்துடன் அவசர தீவிர சிகிச்சை பிரவில் உள்ளார்.
மற்ற இரண்டு பேரின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.