சாப்பிடும் போது குழந்தை மாஸ்க் போடாததால் கர்ப்பிணி பெண்ணை குடும்பத்துடன் விமானத்தை விட்டு வெளியேற உத்தரவிட்ட பணிப்பெண்!
அமெரிக்காவில் சாப்பிடும் போது குழந்தை முகக் கவசம் அணியாததால் விமானப் பணிப்பெண் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை விமானத்தை விட்டு வெளியேற சொன்ன சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில், முகக் கவசம் விதியை மீறியதால் உடனடியாக உடமைகளை எடுத்துக்கொண்டு விமானத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்பெண் கர்ப்பிணி பெண்ணிடம் கூறுகிறார்.
கர்ப்பிணி பெண் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை, சாப்பிடும் போது முகக் கவசம் அணியாததால் பணிப்பெண் குடும்பத்தினரை விமானத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
நீங்கள் உடனடியாக விமானத்தை விட்டு இறங்க வேண்டும் இல்லையென்றால் நான் பொலிசாஸை அழைப்பேன் என விமான பணிப்பெண் குடும்பத்தினரை எச்சரிக்கிறார்.
More of the @SpiritAirlines incident.
— Yossi Gestetner (@YossiGestetner) April 5, 2021
FYI, following the @FlyFrontier incident a few weeks back, @FAANews sent warning letters to passengers who at the time were not even accused of not wearing masks that they were in violation of the mask rule. Letter can’r even be appealed! pic.twitter.com/e7ZgQzA4NV
எனினும், விமானத்திலிருந்து வெளியேற முடியாது என கர்ப்பிணி பெண் கூறுகிறார்.
குறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த யூத பொது விவகார கவுன்சிலைச் சேர்ந்த Yossi Gestetner சம்பவம் குறித்து கூறியதாவது, தாய் ஏழு மாத கர்ப்பிணி, குழந்தைக்கு இரண்டு வயது மற்றும் குடும்பத்தில் சிறப்புத் தேவைகளைக் கொண்டிருந்த ஏழு வயது மகனும் இருக்கிறார்.
VIDEO: @SpiritAirlines staffer tells pregnant Mom that her young child needs to put on a mask despite eating or else police will be called.
— Yossi Gestetner (@YossiGestetner) April 5, 2021
NOTE that the video shows the early moments of this incident, so @SpiritAirlines can’t pull here a he/she said. pic.twitter.com/DpJkXfvWJH
இந்த பிரச்சினையால் குடும்பத்தினர் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறும் படி உத்தரவிடப்பட்டது.
அடுத்து என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மூன்றாவது வீடியோவில் புதிய விமானக் குழுவினருடன் குடும்பம் திரும்பி வந்ததாக தந்தை சொல்வதைக் காட்டுகிறது.
சம்பவம் குறித்து விமான் நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.