கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.
சுற்றுலா சென்ற கேரளக் குடும்பம்
கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த ரியா (Riya Puthanpurayil, 41), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோயல் (41) தம்பதியர், தங்கள் பிள்ளைகளான ட்ராவிஸ் (14) மற்றும் டைராவுடன் (7) கென்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
சுற்றுலாவை முடித்துவிட்டு ரியா, ஜோயல் குடும்பம் கேரளா செல்ல இருந்த நிலையில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 9ஆம் திகதி, அவர்கள் பயணித்த பேருந்து கென்யாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த ஐந்து இந்தியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ரியாவும் அவரது மகளான டைராவும் அடங்குவர். ஜோயலும் ட்ராவிஸும் காயமடைந்து கென்யாவின் தலைநகரான நைரோபியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
பிள்ளைகள் வீட்டுக்கு வருவார்கள் என அவர்களை சந்திக்க ரியா மற்றும் ஜோயலின் பெற்றோர் ஆவலுடன் காத்திருக்க, ரியாவும் டைராவும் இறுதிச்சடங்குக்காக இந்தியா கொண்டுவரப்பட உள்ளதால் அவர்களுடைய குடும்பங்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |